சீனாவில் தனிமையில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “Are You Dead?” (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற புதிய மொபைல் செயலி தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சுமார் 200 மில்லியன் மக்கள் சீனாவில் தனிமையில் வசிப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையைப் போக்குவதே இந்த செயலியின் முக்கிய நோக்கமாகும். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாகக் கிடைக்கும் இது, சர்வதேச சந்தையில் ‘Demumu’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.
இந்த செயலியின் செயல்பாடு மிகவும் எளிமையானது. பயனர் ஒவ்வொரு நாளும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் தொடர்ந்து 48 மணிநேரம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கருதி, செயலி தானாகவே அவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பிவிடும்.
தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” என்ற இதன் நேரடியான பெயர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘அடப்பாவி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?’ என்பது போன்ற நகைச்சுவையான தொனியில் இந்தப் பெயர் அமைந்திருப்பதாகப் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த செயலியின் பெயரை “Are You Okay?” (நீங்கள் நலமா?) அல்லது “Are You Alive?” என மாற்றவும், முதியவர்களுக்காக கூடுதல் வசதிகளைச் சேர்க்கவும் இதன் உரிமையாளர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…
பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…