அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அனைத்திந்திய அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும் செல்வாக்குடன் விளங்கிய இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.
அதிமுக மேடைகளில் இன்றும் உணர்ச்சிப்பூர்வமாக ஒலிக்கும் ‘பூமி உள்ள வரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும்’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய பெருமை இவருக்குரியது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குச் சென்று, பின்னர் 2019ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த கலைராஜன், அங்கு தனக்கு உரிய அங்கீகாரமும் முக்கியத்துவமும் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தற்போது தவெகவில் இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…