கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் நடைபெற்ற மனநல ஆலோசனை வகுப்பின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை ஆசிரியர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தனது வகுப்பைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவி அதற்கு உடந்தையாக இருந்து உதவி செய்ததாகவும் அச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில், சிறுமியின் பெற்றோர் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் ஐந்து சிறார்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கு அருகிலும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் வீட்டிலும் வைத்து அச்சிறுமி பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது இந்த ஐந்து சிறார்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக, பள்ளிக்கு வெளியே உள்ள வேறு சில நபர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். மேலும், அந்த வெளிநபர்களைத் தன்னால் அடையாளப் படுத்த முடியும் என்றும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இந்தத் தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் தொடர்புடைய வெளிநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…