ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 8-ஆம் தேதி பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் நிலையில், இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
‘அபு முஸ்தபா’ என்ற பெயரிலான சமூக ஊடகக் கணக்கிலிருந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை ஆஸ்திரேலியப் போலீஸார் மிகத் தீவிரமான வழக்காகக் கையில் எடுத்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்தும், இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆஸ்திரேலியப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…