தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு ஆவணங்களுக்கும், அவசர தேவைகளுக்கும் இ-சேவை மையங்களை நாடும் மக்கள், இணையதளப் பக்கங்கள் வேலை செய்யாததால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இணையதளத்தில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாகவே இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி திடீரென சேவை நிறுத்தப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை காலம், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் அவசர சூழலில் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் அன்றாடப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு இ-சேவை மையங்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் தங்களின் சொந்தக் கணினிகள் மூலமாகவும் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்து, இ-சேவை இணையதளத்தை அரசு விரைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…
ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாகத் தவறு செய்யும் என்றும், எனவே நிர்வாகிகள் ஓராண்டு காலம்…