“டேய் தகப்பா, மொத்த சொத்தும் எனக்கு தான்”… சொத்துக்காக பெற்ற தந்தையையே கொடூரமாக கொன்ற மகன்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் கட்டாச்சிபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஒடுவன் குப்பம் கிராமம் பகுதியை சேர்ந்த பழனி (70) என்ற விவசாயி அவருடைய ஊரின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆகவும் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே பழனி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே பழனிக்கும் அவருடைய இரண்டாவது மனைவியின் மகனான 40 வயதுடைய சந்திரசேகருக்கும் அடிக்கடி சொத்து தகராறு வந்துள்ளது. எப்போதும் முதல் தரத்தின் பிள்ளைகளுக்கு அனைத்தையும் கொடுப்பதாக தகராறு செய்துள்ளார்.

பழனியின் பூர்வீக சொத்தை அதே ஊரில் உள்ள விவசாய நிலத்தை மொத்தமாக தன்னுடைய பெயருக்கு சந்திரசேகர் கேட்டுள்ளார். ஆனால் பழனி அனைவருக்கும் சமமாக சொத்து பிரித்து தருவேன், உனக்கு மட்டும் எப்படி நிலத்தை மொத்தமாக தர முடியும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் அவருடைய தந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள நிலத்திற்கு இயற்கை உபாதை கழிக்க வந்த தந்தையை சந்திரசேகர் டிராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பழனியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தலைமறைவாக உள்ள சந்திரசேகரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“பேசாமலே சென்ற அமித்ஷா…” மயிலாப்பூரில் திடீர் அப்செட்…. எடப்பாடி மீது கோபமா…? பின்னணி என்ன…?

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ரோடுஷோவை பாதியில் முடித்துவிட்டு யாரிடமும் பேசாமல்…

2 minutes ago

“ஈரான் இனி எழவே முடியாது.. ஒரு நாளைக்கு ரூ.4,000 கோடி இழப்பு”… டிரம்பின் ஒற்றைப் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக்…

5 minutes ago

4 % வாக்கு வித்தியாசம் ஆட்சியையே மாற்றும்…! விஜய்யின் தவெக-வுக்கு 23% வாக்குகள்…!! சர்வேயில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக்…

7 minutes ago

3,000 மீட்டர் ஆழத்தில் மர்மம்.. ஆஸ்திரேலிய கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த அதிசயம்…. விஞ்ஞானிகளை அதிரவைத்த 110 புதிய உயிரினங்கள்…!

ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆழ்கடல் ஆய்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச…

11 minutes ago

வாட்ஸ்அப் குழுவில் மதம் மாறக் கட்டாயமா…? டிசிஎஸ் நிறுவனத்தில் கைதான 8 பேர்…. தேடப்படும் முக்கியக் குற்றவாளி…!!

நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…

16 minutes ago

போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…

22 minutes ago