தெலுங்கானா மாநிலம் எல்கதுரத்தி அருகே உள்ள கோபாலூரை சேர்ந்த கிருபாகர் என்பவருடைய மகள் கீர்த்தனா (19) ஹைதராபாத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனிடையே கல்லூரியில் நடத்தும் பாடம் தனக்கு சரியாக புரியவில்லை என்று தினமும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர்களும் தங்கள் மகளுக்கு சமாதானம் கூறி தைரியப்படுத்தினர். ஆனால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அவரை விடுமுறையில் வீட்டுக்கு வரவழைத்து வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே வீட்டுக்கு வந்த கீர்த்தனா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கீர்த்தனா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி பாடம் புரியாததால் மாணவியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…