சென்னை ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் நிகழ்ந்த சாலை விபத்து தகராறில், லோடு வேன் ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ரகு (42) என்பவர் கேஸ் சிலிண்டர் ஏற்றிய லோடு வேனை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது வேன் அங்கிருந்த ஆட்டோ ஒன்றின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் (32), லோடு வேன் ஓட்டுநர் ரகுவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மணிகண்டன், ரகுவின் மார்புப் பகுதியில் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ரகு, மாரடைப்பு அல்லது பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடனே ராயபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ரகுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேன் ஓட்டுநரைத் தாக்கி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…