“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்தில் சிக்கி, மாணவர்கள் உட்பட குறைந்தது 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் கேமிங் மண்டபம் செயல்பட்டு வந்த அந்தப் பல்லடுக்குக் கட்டிடத்தில், மதிய வேளையில் திடீரெனத் தீப்பற்றி சில நிமிடங்களிலேயே கரும்புகையுடன் கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களும், விளையாட வந்திருந்த இளைஞர்களும் தப்பிக்க வழியின்றி அலறியடித்தபடி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தின.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதை ட்ராமா சென்டரின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பிரேம்ராஜ் சிங் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்; மேலும், காயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து குறித்து அறிந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அலிகார் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசரமாக லக்னோ திரும்பியதோடு, விபத்து நடந்த இடத்தை நேரடியாகப் பார்வையிடவும் உள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் ஆறுதல் கூறியதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்துக்கான காரணம் குறித்தும், கட்டிடத்தில் ஏதேனும் பாதுகாப்பு விதிமீறல்கள் உள்ளதா என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

32 minutes ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

39 minutes ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

54 minutes ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

60 minutes ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

1 மணத்தியாலம் ago

“நல்லா பண்றீங்க… தினமும் உங்கள பத்திதான் பேச்சு…!” – முதலமைச்சர் விஜய்க்கு போன் போட்டு … வாழ்த்திய ரங்கசாமி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…

2 மணத்தியாலங்கள் ago