நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமந்தா, எமி ஜாக்சன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிதாக வெளியாக உள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆரோக்கியமான வர்த்தகச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டிப் பல புதிய படங்கள் திரைக்கு வரவிருப்பதால், அவற்றுக்குப் போதிய இடவசதி அளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…