திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் துர்க்கைராஜ் (30). இவருக்கும் இவரது மனைவி சுலோச்சனாவிற்கும் (28) இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, சுலோச்சனா கோபித்துக் கொண்டு தனது மகனுடன் புளியம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மனைவியைச் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துச் செல்வதற்காக துர்க்கைராஜ் தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சுலோச்சனாவின் அண்ணனான பரத் (32) இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தையின் போது துர்க்கைராஜுக்கும் பரத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரத், அருகில் கிடந்த கல்லை எடுத்து மைத்துனர் என்றும் பாராமல் துர்க்கைராஜின் தலையில் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த துர்க்கைராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரத்தைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை அழைக்க வந்த இடத்தில் மைத்துனரே படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…
மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…
தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…