உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இந்நடவடிக்கை சோர்ந்து கிடந்த திமுக தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தையும் சுறுசுறுப்பையும் அளித்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இந்த நகர்வின் பின்னணியில் தவெக தலைவர் விஜய்யின் மிகத் துல்லியமான அரசியல் வியூகம் ஒளிந்திருப்பதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது திமுகவின் ஒட்டுமொத்த பலத்தையும் எதிர்ப்புக் கணையையும் ஆழம்பார்க்கும் ஒரு சோதனை முயற்சி என்றும், விஜய் மீது அண்மைக்காலமாகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து ‘இறங்கி அடித்து’ வரும் திமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்ட மிகத் தெளிவான எச்சரிக்கை மணி என்றும் கூறப்படுகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைமை மீதே நடவடிக்கை பாயும்போது, அடிமட்ட நிர்வாகிகள் தானாகவே கட்டுக்குள் வந்து அமைதியாகி விடுவார்கள் என்ற கணக்கீட்டிலேயே தவெக தலைமை இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு தாட்கோ மூலமாகப் பழங்குடியின விவசாயிகளின் நலன் கருதி 90 சதவீத மானியத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தை…
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத்…
ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…
இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…
இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…