உதயநிதி கைதின் பின்னணியில் பனையூர் ஸ்கெட்ச்…. CM விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதானா?…. கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இந்நடவடிக்கை சோர்ந்து கிடந்த திமுக தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தையும் சுறுசுறுப்பையும் அளித்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இந்த நகர்வின் பின்னணியில் தவெக தலைவர் விஜய்யின் மிகத் துல்லியமான அரசியல் வியூகம் ஒளிந்திருப்பதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது திமுகவின் ஒட்டுமொத்த பலத்தையும் எதிர்ப்புக் கணையையும் ஆழம்பார்க்கும் ஒரு சோதனை முயற்சி என்றும், விஜய் மீது அண்மைக்காலமாகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து ‘இறங்கி அடித்து’ வரும் திமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்ட மிகத் தெளிவான எச்சரிக்கை மணி என்றும் கூறப்படுகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைமை மீதே நடவடிக்கை பாயும்போது, அடிமட்ட நிர்வாகிகள் தானாகவே கட்டுக்குள் வந்து அமைதியாகி விடுவார்கள் என்ற கணக்கீட்டிலேயே தவெக தலைமை இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.