“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4.80 லட்சம் கடனா?”…. அதிர்ச்சி தரும் பட்ஜெட் உண்மை… ஷாக் கொடுத்த தமிழக அரசு….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தமிழகத்தில் மாநில அரசின் மொத்தக் கடன் அளவு அதிகரித்து வரும் சூழலில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் தோராயமாக ரூ.4.80 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை மற்றும் அரசின் மொத்தக் கடன் நிலுவையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது. இலவசங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக அரசு மேற்கொள்ளும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், மாநிலத்தின் நிதிப் பொறுப்புகளும் கடன்களும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பட்ஜெட் தரவுகளின்படி, தமிழக அரசின் மொத்தக் கடன் நிலுவை சுமார் ரூ.10.98 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 2.28 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில், இந்த மொத்தக் கடனை குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரித்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக ரூ.4.80 லட்சம் கடன் சுமை பங்காக வருகிறது. இத்தகைய பெருங்கடன் நிலையைக் கட்டுப்படுத்தவும், மாநிலத்தின் நிதிச் சுமையைக் குறைக்கவும் திறம்பட நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.