“மாதவிடாய் நேரத்திலும் விடல…. ஏன் இன்னும் கைது பண்ணல”…. “விஜய் அண்ணனை நம்பிதான் வாக்களித்தோம்… ஆனால்?”…. தற்கொலை மிரட்டல் விடுத்த பாதிக்கப்பட்ட பெண்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த விஜய் மோகன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் அத்துமீறல் மற்றும் ஆபாச மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள தகவலின்படி, தவெகவின் மகளிர் அணியில் உயர்பதவி வாங்கித் தருவதாகக் கூறி விஜய் மோகன் அவரிடம் பழகியுள்ளார். இன்ஸ்டாகிராம் வீடியோ காலின் போது ரகசியமாகச் செய்யப்பட்ட ஸ்கிரீன் ரிக்கார்டிங் ஆதாரங்களை வைத்து, அப்பெண்ணை தொடர்ச்சியாக மிரட்டிப் பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் கடும் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொடர் அச்சுறுத்தல்களைத் தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூலை 22-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதனடிப்படையில், ஜூலை 23-ஆம் தேதியன்றே ஆற்காடு டவுன் காவல் துறையினர் விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (FIR) செய்தனர். இருப்பினும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்த பின்னரும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல் துறை எவ்விதத் தீவிர விசாரணையோ அல்லது கைது நடவடிக்கையோ எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காவல் துறையின் தாமதமான நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், குற்றம் சாட்டப்பட்ட விஜய் மோகனின் புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் அடங்கிய ஆதாரங்களை ஏந்தியவாறு சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணைக்குத் தேவையான தனது செல்போன் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு உள்ளே அழைத்துச் சென்று, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அன்பு அவர்களிடம் நேரில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து அனைத்து விவரங்களையும் மனுவாகப் பெற்றுக்கொண்ட கூடுதல் டி.ஜி.பி, சட்டப்படி உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உயர் அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து அப்பெண்ணின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

Nanthini

Recent Posts

ஐஏஎஸ் கனவோடு வந்த மாணவி…! பெற்றோரின் ஆசையை சுக்குநூறாக்கிய தருணம்…. நடந்தது என்ன…? நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் நந்திகாம மண்டலத்திற்குட்பட்ட ஐதவரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கங்கினாடப்பில் செயல்பட்டு வரும் சரத்…

7 minutes ago

“இறந்தால் குற்றம்… புதைத்தால் ஆபத்து..” பல ஆண்டுகள் அழியாமல் இருக்கும் மனித உடல்களின் மர்மம்…! நார்வேயின் லாங்கியர்பியனில் நிலவும் அபூர்வ விதிமுறை…!!

வட துருவப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள நார்வே நாட்டின் லாங்கியர்பியன் என்ற நகரத்தில், மனிதர்கள் இறப்பதற்கும் உடல்களைப் புதைப்பதற்கும்…

20 minutes ago

என்ன வசதி தெரியுமா? நீண்ட தூரம் போறிங்களா கவலை வேண்டாம்… பேருந்தில் புதிய மாற்றம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரூ.10 விலையில்…

23 minutes ago

அம்மாடியோவ்…! 3 மணி நேர படிப்பிற்கு ரூ.8.5 லட்சமா…? அமெரிக்க ஸ்கூல் கட்டணத்தை கண்டு வாயை பிளந்த நெட்டிசன்கள்… இணையத்தில் வைரலாகும் பதிவு…!!

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஆரம்பக் கல்விக்கான கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வாரத்தில் 2 நாட்கள்…

34 minutes ago

நீங்க தான் காரணம்… நள்ளிரவில் பரவிய நச்சு வாயு…பரிதாபமாக பலியான 2 மகள்கள்… கண்ணீர் மல்க வைக்கும் உண்மை சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூரைச் சேர்ந்த விவசாயியான மல்லேஷ் தேபேகர், தனது தோட்டத்தில் விளைந்த கொண்டைக்கடலையை அறுவடை செய்து…

36 minutes ago

கடவுளே இத்தனை கொடுமையா…? “அக்காவை தொடர்ந்து தாய், தந்தை பலி…” குடும்பத்தையே இழந்து மூளை கட்டியோடு போராடும் வாலிபரின் சோகம்…!வைரல் வீடியோ…!!

அடுத்தடுத்து நடந்த சோகங்களால் தனது அக்கா, தந்தை மற்றும் தாய் ஆகிய அனைவரையும் இழந்து அனாதையாக நின்று போராடும் வாலிபர்…

44 minutes ago