அமெரிக்காவில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஆரம்பக் கல்விக்கான கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வாரத்தில் 2 நாட்கள் தினமும் 3 மணி நேரம் மட்டுமே நடக்கும் வகுப்புகளுக்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.3.8 லட்சமும், 5 நாட்கள் நடக்கும் வகுப்புகளுக்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.8.5 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தக் தொகையைக் கொண்டு ஒரு குழந்தையின் முழுமையான கல்வியையே முடித்துவிட முடியும் என்ற நிலையில், இவ்வளவு குறுகிய நேரப் படிப்பிற்கு இத்தனை பெரிய தொகை வசூலிக்கப்படுவது சரியா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், இக்கட்டண உயர்வை அமெரிக்க நாட்டின் தனிநபர் வருமானம் மற்றும் அந்நாட்டின் வாழ்க்கைச் செலவினங்களுடன் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பொருளாதார அமைப்பும் மக்களின் உழைப்புக்கான ஊதியமும் இந்தியாவை விட வேறுபட்டது என்பதால், இதை நேரிடையாக இந்திய ரூபாயுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய…
நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே…
இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களின்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே…