ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற மாணவன், பள்ளி நிர்வாகத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டண பாக்கியைச் செலுத்தாத காரணத்தால், வகுப்பறையில் அனைவரின் முன்னிலையிலும் பள்ளி ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்டு வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளான். இந்தச் சம்பவத்தின் போது சக மாணவர்கள் சிலர் தன்னை பார்த்து சிரித்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான அம்மாணவன், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
கல்லூரி ஊழியர்களின் இரக்கமற்ற நடவடிக்கை மற்றும் மனரீதியான துன்புறுத்தலே தங்களது மகனின் இந்தத் தீவிர முடிவிற்குக் காரணம் எனக் கூறி, சோகத்தில் மூழ்கிய பெற்றோரும் உறவினர்களும் ஆத்திரமடைந்து அக்கூட்டமாகச் சென்று அந்தச் தனியார் பள்ளியை தாக்கிச் சேதப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…
திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வர் ராவ் என்பவரது மனைவி பவானி, கூரியர் நிறுவன ஊழியரான சைதுலு என்பவருடன்…
மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…
தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…
மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…