மிஸ் பண்ணிடாதீங்க!.. 18 வயது முடிந்த பெண் குழந்தைகளா?… உங்களுக்கான முதிர்வுத் தொகை தயார் – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!

Spread the love

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத் தொகையைப் பெறாத பயனாளிகள், தங்களது முதிர்வுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பயனாளிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் சமூக நலத்துறையிடமிருந்து பெறப்பட்டு, மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் thanjavur.nic.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பயனாளிகள் தங்களது அசல் வைப்புத்தொகை ரசீது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி இந்த முதிர்வுத் தொகையைப் பெற்றுப் பயன்பெறலாம்.

இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டத்தில் முதிர்வுத் தொகை பெற தகுதியிருந்தும் இதுவரை கண்டறிய முடியாத 903 பயனாளிகளின் பெயர்கள் மாவட்ட இணையதளத்தில் tirupathur.nic.in வெளியிடப்பட்டுள்ளன. பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அசல் வைப்புத்தொகை பத்திரம் மற்றும் அதன் நகல், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பயனாளியின் பெயரிலான வங்கிக் கணக்கு புத்தகம், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் (B-பிளாக், முதல் தளம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04179299561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Gayathri

Recent Posts

“டைரக்ட்டா பேசுங்க, மீடியா முன்னாடி வேண்டாம்”… கூட்டணிகளுக்கு விஜய் போட்ட ‘ரெட் கார்டு’…. உளவுத்துறை அறிக்கையால் பரபரப்பு…!

ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசின் கொள்கை…

4 minutes ago

“மனைவியை கொன்றுவிட்டு ‘ருக்கையாவைப் பார்க்கணும்’ என புலம்பல்… தந்தையைக் காட்டி கொடுத்த குழந்தை… மர்மம் விலகாத பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இரத்லாம் பகுதியில் உள்ள சுனாரோன் கி பாவடி பகுதியில், அஸ்கர் அலி (35) என்ற நபர்…

12 minutes ago

“அறுவை சிகிச்சை மேஜையில் நோயாளி… கையில் கத்தி”… மருத்துவர் செய்த ‘அந்த’ காரியம்… உலகையே உலுக்கிய ஜப்பான் வீடியோ….!

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணம் யட்சுஷிரோ நகரிலுள்ள குமாமோட்டோ விரிவான மருத்துவமனையில், கடந்த 2026 ஜூலை 28 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

13 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க”… ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. வேடிக்கை பார்த்த பயணிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

மும்பை உள்ளூர் ரயிலில் பெண் ஒருவர் சக ஆண் பயணியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

19 minutes ago

“எனக்கு எதுவுமே தெரியாது”….. தென்னந்தோப்பில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை… நர்ஸ் கொடுத்த ட்விஸ்ட்…. வெளியான அதிர்ச்சி உண்மை….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் அமைந்துள்ள தென்னந்தோப்பில், தொப்புள் கொடியுடன் கூடிய ஆண்…

25 minutes ago

அசந்து தூங்கிய பெண்…! ஆபாசமாக போட்டோ…! நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு தர்ம அடி… பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி பகுதியில் தனியாக வசித்து வரும் பெண்களை இலக்காகக் கொண்டு, நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களை ஆபாசமாகச்…

25 minutes ago