“எனக்கு எதுவுமே தெரியாது”….. தென்னந்தோப்பில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை… நர்ஸ் கொடுத்த ட்விஸ்ட்…. வெளியான அதிர்ச்சி உண்மை….!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் அமைந்துள்ள தென்னந்தோப்பில், தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோப்பில் இருந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வடசேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட மருத்துவமனையில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ராமலெட்சுமி என்ற நர்ஸ் மீது சந்தேகம் எழுந்தது. இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி எனக் கூறி சரியாகப் பணிக்கு வரவில்லை என்பதும், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. அங்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த அவர், பின்னர் தீவிர விசாரணையில் அக்குழந்தை தனக்குத்தான் பிறந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.

திருமணமாகாத அந்த நர்ஸ், தன் காதலனுடன் இருந்த நெருக்கமான உறவின் காரணமாகக் கர்ப்பமடைந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததால், பயத்தில் அதனைத் தென்னந்தோப்பில் வீசி எறிந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், குழந்தை உண்மையிலேயே இறந்து பிறந்ததா அல்லது கொன்று வீசப்பட்டதா என்பதைப் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதி செய்ய முடியும் எனப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

கிசுகிசு விற்று 2 வீடுகள்!.. அடுத்தவர் ரகசியமே வருமானம்…உலகத்தையே உலுக்கிய நூதன பிசினஸ்…கொலம்பியா பாட்டியின் ஷாக்கிங் பேட்டி…!!

அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற…

7 minutes ago

ஷாக்… வேனில் உங்களை யார் போகச் சொன்னது?… சேகர்பாபுவை ஆவேசமாக… வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!

உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மூத்த தலைவர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கடிந்து கொண்டதாகத்…

8 minutes ago

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

22 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

25 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

41 minutes ago