இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் ‘ஆயுள் சான்றிதழை’ சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இந்த நடைமுறை மிகவும் சிரமமானது என பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசும் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ-வும், ஓய்வூதியதாரர்கள் எந்தவித அலைச்சலுமின்றி எளிதாக இந்த சான்றிதழைச் சமர்ப்பிக்க பல புதிய வசதிகளை தற்போது ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
வயதானவர்கள் மற்றும் நேரில் சென்று சான்றிதழைச் சமர்ப்பிக்க இயலாதவர்களின் நலனுக்காக, தபால் துறை மூலமாக ‘இலவசமாக இல்லத்திற்கே வரும் சேவையை’ இபிஎஃப்ஓ வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் 033-22029000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தங்கள் கோரிக்கையை பதிவு செய்யலாம். இதன் மூலம், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதோடு, வருடாந்திர ஆயுள் சான்றிதழையும் மிக எளிதாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
மேற்கண்ட எண்ணில் கோரிக்கை வைக்கப்பட்டவுடன், தபால் துறை ஊழியர் ஒருவர் நேரடியாக ஓய்வூதியதாரரின் வீட்டிற்கே வந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை முற்றிலும் இலவசமாகப் பதிவு செய்ய உதவுவார். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும் நடைமுறை உள்ளது. எனவே, நடமாட சிரமப்படுபவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த சிறப்பான சேவையை பயன்படுத்தி, எவ்வித இடையூறுமின்றி தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம்…
தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று காணொலி வாயிலாக ஆஜராகி சுமார் 20…
தமிழ்நாடு அரசு தாட்கோ மூலமாகப் பழங்குடியின விவசாயிகளின் நலன் கருதி 90 சதவீத மானியத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தை…
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத்…
ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…