வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதனைப் போலவே ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.
மேலும் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவையில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரிக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில், வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்…
அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…
சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…
தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…