கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, ஆற்காடு அருகேயுள்ள கிராமம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த தக்ஷிணாமூர்த்தி என்ற இளைஞர், கதவைத் தட்டியுள்ளார். மூதாட்டி கதவைத் திறந்தவுடன் அவரது வாயைப் பொத்தி, வீட்டிற்குள் தள்ளிப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதைப்பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளியான அத்திதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தியைக் கைது செய்தனர். அவர் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வயது வித்தியாசமின்றி, கஞ்சா போதையால் அரங்கேற்றப்பட்ட இந்த வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

SATHISH R

Recent Posts

6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…

21 seconds ago

“உனக்காக ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”… காதலனோடு ஹோட்டலில் இருந்த இளம்பெண்… நள்ளிரவில் வந்த வீடியோ கால்… ஹைதராபாத்தில் பதறவைக்கும் பின்னணி…!

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…

4 minutes ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…

5 minutes ago

“மீண்டும் எலிக்கறி சாப்பிடும் நிலை”… ஜெயிலுக்கு போகக்கூட நான் ரெடி.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை… ஜல்லிக்கட்டு பாணியில் வெடிக்கப் போகும் அடுத்த மாபெரும் புரட்சி..!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…

8 minutes ago

உருகும் ஐரோப்பா… பற்றி எரியும் காடுகள்.. ஐரோப்பாவை உலுக்கும் 40°C கொடுமை… WHO கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை…. உலகையே பயமுறுத்தும் ‘ஒமேகா பிளாக்’….!

ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின்,…

16 minutes ago

திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக இணைந்தனர்.. தவெக அரசுக்கு வந்த திடீர் ஆபத்து?… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளான திமுக,…

21 minutes ago