ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி சங்கர் கத்ரி குடிநீரில் ஏதோ ஒரு போதைப்பொருளைக் கலப்பதாக அங்கு பணிபுரியும் நான்கு பெண் ஊழியர்கள் சந்தேகித்துள்ளனர். கடந்த ஜூன் 29 அன்று, அவர்கள் தங்களின் மொபைல் போன் மூலம் ரகசியமாகக் கண்காணித்தபோது, உரிமையாளர் தண்ணீரில் ஏதோ ஒரு பொருளைக் கலப்பது கேமராவில் பதிவானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள், வெறும் ஆறு நிமிடங்களில் சுமார் 43 முறை செருப்பால் அவரை அடித்ததோடு, இச்சம்பவம் குறித்த வீடியோ ஆதாரத்துடன் ராஜ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள பார்லர் உரிமையாளர், கடந்த சில நாட்களாகத் தனது தொழில் சரியாக நடக்காததால், ஆன்மீகக் காரணங்களுக்காகவும் பார்லர் செழிக்கவும் மட்டுமே தண்ணீரில் கங்காஜலத்தையும் (புனித நீர்) பார்லர் வளாகத்தில் மஞ்சள் கடுகையும் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…