நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காளிமுத்து தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மற்றும் பைக்குகளில் வந்த கும்பல் அவர்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இந்த இரட்டை கொலைக்கு 14 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதமே முக்கிய காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மூலச்சி கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவர் காளிமுத்து தரப்பினரால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த பழிவாங்கலுக்கு அஞ்சி பல ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வந்த காளிமுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதை நோட்டமிட்ட எதிர்த்தரப்பினர், பழிக்குப்பழியாக இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மகேந்திரன், கொக்கிகுமார் மற்றும் முத்துச்செல்வன் ஆகிய மூன்று பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிப்பதற்காக காவல்துறை தரப்பில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Swetha

Recent Posts

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

8 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

15 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

23 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

24 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

24 minutes ago

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

35 minutes ago