கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

By SATHISH R on ஆடி 4, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, ஆற்காடு அருகேயுள்ள கிராமம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த தக்ஷிணாமூர்த்தி என்ற இளைஞர், கதவைத் தட்டியுள்ளார். மூதாட்டி கதவைத் திறந்தவுடன் அவரது வாயைப் பொத்தி, வீட்டிற்குள் தள்ளிப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதைப்பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளியான அத்திதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தியைக் கைது செய்தனர். அவர் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வயது வித்தியாசமின்றி, கஞ்சா போதையால் அரங்கேற்றப்பட்ட இந்த வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.