உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது சொந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தான் கடத்தப்பட்டது போல் போலிப் படங்களை உருவாக்கித் தனது தந்தையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளான். மேலும், ரூ 1 லட்சம் பணம் தராவிட்டால் மகனைக் கொன்றுவிடுவதாகவும் அந்தச் செய்தியில் மிரட்டியுள்ளான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாகக் காவல் துறையிடம் புகாரளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, வெறும் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்துப் பிடித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அவன் தீட்டிய அனைத்துச் சதித்திட்டமும் அம்பலமானது.
இந்தச் சம்பவத்தின் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவனுக்குப் ரொக்கப் பணமாக எதுவும் வேண்டாம் என்று கூறியதுதான். “அந்தப் பணத்தை எனது ஆன்லைன் கேமிங் கணக்கில் ‘டாப்-அப்’ மட்டும் செய்து விடுங்கள்” என்று அவன் அசால்ட்டாகக் கூறியுள்ளான். ஆன்லைன் விளையாட்டுப் போதையால் ஒரு சிறுவன் சினிமா பாணியில் அரங்கேற்றிய நாடகம், இறுதியில் சில மணி நேரங்களிலேயே காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர்,…