“காதல்னா இது தான்!”… ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த பஞ்சாபி காதலன்… இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ…!!

Spread the love

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங் ஆகியோரின் திருமணம், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குருத்வாராவில் சீக்கிய முறைப்படி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது துணையின் உணர்வுகளுக்கும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் மதிப்பளித்து, மருதாணி மற்றும் பாரம்பரிய வளையல்களை அணிந்து முழுமையான பஞ்சாபி மணப்பெண்ணாகவே பியா மாறினார். இரு நாட்டு கலாச்சாரங்களும் சங்கமித்த இந்த திருமண விழாவில், இரு வீட்டாரும் அவர்களது நண்பர்களும் பெருமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணத்தின் பின்னணியில் நெஞ்சை உருக்கும் ஒரு குடும்பப் பின்னணி உள்ளது. 1980-களில் ஜெர்மனிக்குச் சென்ற ராபினின் தந்தை ஜகதார் சிங், அங்கேயே ஒரு ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். 2017-ல் அவர் உயிரிழந்த நிலையில், பஞ்சாபில் உள்ள அவரது குடும்பத்தினரால் அவரது திருமணத்தையோ, இறுதிச் சடங்கையோ நேரில் காண முடியாமல் போனது. தனது தாத்தா, பாட்டி மற்றும் அத்தைகளின் பல வருட ஏக்கத்தைப் போக்குவதற்காகவும், மறைந்த தனது தந்தையின் சொந்த மண்ணின் மீதான பாசத்தைக் கௌரவிப்பதற்காகவுமே ராபின் சுமார் 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து தனது திருமணத்தை சொந்த ஊரில் நடத்தியுள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ஜெர்மனியில் இருந்து வந்திருந்த இருவரின் குடும்பத்தினரும் பாரம்பரிய பஞ்சாபி உடைகளை அணிந்து, இந்தியத் திருமணச் சடங்குகளை முழுமையாகக் கொண்டாடினர். குறிப்பாக, இந்தியத் திருமண முறைகள் குறித்து யூடியூப் வீடியோக்கள் வாயிலாக முன்கூட்டியே தெரிந்து கொண்ட பியா, யாருடைய மனதும் புண்படாதவாறு சடங்குகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தார். தந்தையின் மீதான அன்பால் எல்லைகளைக் கடந்து நடந்த இந்த நெகிழ்ச்சியான திருமணம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில், இந்த ஜோடி விரைவில் ஜெர்மனியிலும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Gayathri

Recent Posts

தலைநகரில் கூடும் தென்மாநில முதல்வர்கள்… 19, 20 தேதிகளில் கோவளத்தில் ‘மெகா’ கூட்டம்… அமித்ஷா – விஜய் சந்திப்பு நடக்குமா? வெளியான தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“காரை விட்டு இறங்குடா வெளியே”… ஆபாச லீலைகளில் ஈடுபட்ட நபரை… வெளுத்து வாங்கிய பெண்… அதிர்ச்சியில் உறைந்த EV சார்ஜிங் மையம்…!!

ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி…! மகளிருக்கு அதிரடி ஜாக்பாட்..!! தலா 5 இலவச ஆடுகள்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… அமைச்சர் கமலி முக்கிய அறிவிப்பு…!!

தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரலையா?… ₹10,000 அபராதம்… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… பணமா வேணாம்… என் கேம் அக்கவுண்ட்ல டாப்-அப் பண்ணுங்க?… AI மூலம் போலி போட்டோ அனுப்பி… தந்தையை மிரட்டிய சிறுவன்… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…

5 மணத்தியாலங்கள் ago

“சத்தம் போட கூடாது… கழுத்தை கம்பியால் இறுக்கி…” மாடிக்கு சென்ற மாணவியை சீரழித்த செக்யூரிட்டி… வேலைக்கு சேர்ந்த 6 நாட்களில் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர்,…

5 மணத்தியாலங்கள் ago