குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர், கட்டடத்தின் மாடியில் உலாவுவதைக் கண்ட காவலாளி தரம் சிங் என்பவர், அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி சத்தம் போடாமல் இருக்க அவரது கழுத்தில் கம்பியை இறுக்கிக் கட்டி இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். பின்னர் மாணவியின் மொபைல் போனைப் பிடுங்கிக்கொண்டு, மாடிக் கதவை வெளியே பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கத்திச் கூச்சலிட்டதை அடுத்துக் கீழே இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேலைக்குச் சேர்ந்த 6 நாட்களிலேயே இக்கொடூரத்தைச் செய்த உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட போனை மீட்பதற்காகக் குற்றவாளியை அழைத்துச் சென்றபோது, அவன் போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கித் தப்பிக்க முயன்றுள்ளான். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், போலீசார் நடத்திய தற்காப்புத் தாக்குதலில் குற்றவாளியின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…