தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (27). இவர் திருப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரும் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தனர்.
சரவணக்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, தனது கர்ப்பிணி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சரவணக்குமார், தான் காதலித்துக் கரம் பிடித்த மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு, சரவணக்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான நான்கே மாதங்களில் காதல் மனைவி அடித்துக் கொல்லப்பட்டதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…