அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அப்பெண் மாம்பழங்கள் நிறைந்த பையுடன் பூங்காவிற்குச் சென்று குரங்குகளுக்கு உணவளித்தபோது, அங்கு வந்த அண்டை வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குவாதத்தின் போது, “இது என்ன உன் அப்பன் வீட்டுப் பூங்காவா?” என்று அண்டை வீட்டார் ஒருவர் கேட்டதற்கு, அப்பெண் தைரியமாகப் பதிலளித்துள்ளார். “மனிதர்கள் குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவதற்கு முன்பே குரங்குகள் இந்த வனப் பகுதியில் தான் வாழ்ந்து வந்தன; விலங்குகளின் வாழிடத்தை நாம் தான் ஆக்கிரமித்துள்ளோம்” என்று சுட்டிக்காட்டிய அவர், பசியோடு இருக்கும் விலங்குகளுக்குத் தனது சொந்தச் செலவில் உணவளிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், மனிதர்களுக்கு விலங்குகள் மீதான இரக்கம் குறைந்துவிட்டது என்றும் வாதிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பயனர்களிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் அப்பெண்ணின் விலங்கு நேயத்தையும் இரக்க குணத்தையும் பாராட்டி ஆதரவு தெரிவித்து வரும் அதே வேளையில், குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பது குரங்குகளின் அச்சுறுத்தலையும், மனிதர்களுக்கான பாதுகாப்புப் பிரச்சினைகளையும் அதிகரிக்கும் எனப் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…
1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…