தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் என். மேரி வில்சன் அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும் என்றும், பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட “வெற்றிப் பயணம் திட்டம்” என்ற மகளிருக்கான இலவச பேருந்து பயண வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து, முதல்வர் விஜய் கடந்த 16-ஆம் தேதி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் உட்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து போக்குவரத்து மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 அரசு போக்குவரத்து கழகங்களும் தங்களின் நிதித் தேவைகள் மற்றும் பேருந்துகள் குறித்த தனித்தனி அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், மகளிருக்கான இந்த முக்கிய வாக்குறுதி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என்ற பெரு எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அமைதியான முறையில் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…
1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…