“200 கோடி எங்கே போச்சு?”… காலை உணவுத் திட்டத்தின் பின்னணியில் நடப்பது என்ன?… தமிழ்நாடு அரசின் பரபரப்பு முடிவு…. அரசால் வெளியான அதிர்ச்சி நிதி விவரங்கள்..!

Spread the love

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களில் ஒன்று காலை உணவுத் திட்டம். தொடக்கத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இச்சிற்றுண்டி திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், இத்திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் சூழலில், இதற்கான நிதி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு வளர்ச்சி நிதியில் இருந்தும் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான சத்துணவு வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலச் செலவினங்கள் மற்றும் குறிப்பிட்ட உதவித் தொகைகள் அடங்கிய பொதுப் பிரிவின் கீழ் ரூபாய் 134 கோடியே 45 லட்சத்து 24 ஆயிரத்து 458 ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், அவர்களுக்குச் சீரான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் இச்சிறப்பு நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 63 கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 64-ம், மலைக்கிராமங்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்காகப் பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 6 கோடியே 11 லட்சத்து 14 ஆயிரத்து 748-ம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, இடைநிற்றலை வெகுவாகக் குறைத்துள்ள இக்காலை உணவுத் திட்டம், தற்போது அடுத்தகட்ட விரிவாக்கத்தை நோக்கி நகர்கிறது. இருப்பினும், இத்திட்டத்திற்கான கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு வளர்ச்சி நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அரசியல் தளங்களில் பல்வேறு விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

Nanthini

Recent Posts

“வாடி குடும்பம் நடத்தலாம்”…. வர மறுத்த மனைவி… குறுக்கே வந்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… திருவள்ளூரில் நள்ளிரவு பயங்கரம்…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…

4 minutes ago

நாய்கள் கடித்த சடலம்… டெல்லியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….. டெம்போவில் கதற கதற…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…

8 minutes ago

நிலவில் நடந்த பயங்கரம்…. யாருக்குமே தெரியாமல் உருவான 728 அடி பிரம்மாண்ட பள்ளம்… நாசாவுக்கே அதிர்ச்சி…. இரவோடு இரவாக மாறிய நிலவின் முகம்…!

பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…

14 minutes ago

என் குழந்தைகள் அவரை ‘அப்பா’னு தான் கூப்பிட்டாங்க…. கருப்பு முருகானந்தம் மீது கதறும் பாஜக பெண் நிர்வாகி…. டெல்லி மேலிடத்திற்குச் சென்ற ரகசிய கடிதம்….!

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…

21 minutes ago

“காங்கிரஸுடன் லடாய்… தவெக MLA-க்கள் கடுப்பு”…. CTR நிர்மல் குமாருக்கு செக் வைக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்….!

மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…

33 minutes ago

“திமுக தயவு இல்லனா நீங்க எம்.எல்.ஏ-வே ஆகியிருக்க முடியாது”…. வன்னியரசை வைத்தே திருமாவை அலறவிட்ட ராஜகம்பீரன்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…

44 minutes ago