என் குழந்தைகள் அவரை ‘அப்பா’னு தான் கூப்பிட்டாங்க…. கருப்பு முருகானந்தம் மீது கதறும் பாஜக பெண் நிர்வாகி…. டெல்லி மேலிடத்திற்குச் சென்ற ரகசிய கடிதம்….!

Spread the love

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பரபரப்பான புகார்களைத் தெரிவித்து பாஜக தேசிய மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த அந்தப் பெண், தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியில் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், தேசிய நிர்வாகிகள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மேலிடத் தலைவர்களுக்கு அவர் விரிவான புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், “நான் மாற்றுத்திறனாளிகளான இரு குழந்தைகளுக்குத் தாயாக இருந்து, தனியாக அவர்களைக் கவனித்துக்கொண்டு அரசியல் பணியாற்றி வருகிறேன். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய கருப்பு முருகானந்தத்தின் வார்த்தைகளை நம்பி, கர்நாடக பாஜகவில் எனக்கு இருந்த மாநில அளவிலான பதவியைத் துறந்து 2024-ஆம் ஆண்டு திருச்சிக்குக் குடிபெயர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அவர் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கினார். அவருடனான உறவின் காரணமாக நான் கர்ப்பமான நிலையில், எனது விருப்பத்திற்கு மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்தார். மேலும், அது தொடர்பான மருத்துவ ஆவணங்களையும் அவர் திருத்தி மறைத்துவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து தனது மனுவில், 2026 சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறித் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அந்தப் பெண், தனது குழந்தைகளின் பள்ளி ஆவணங்களிலேயே கருப்பு முருகானந்தத்தின் பெயர் பாதுகாவலராக (Guardian) இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டபோது, தன்னையும் தன் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதுடன், பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டை ஆக்கிரமித்துத் தன்னைத் தெருவில் நிறுத்த முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு நேர்ந்த இந்த அநீதிகளையும் குற்றச்சாட்டுகளையும் நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் பாஜக மேலிடத்திடம் வழங்கத் தயாராக இருப்பதாக அந்தப் பெண் நிர்வாகி உறுதி அளித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கட்சித் தலைமை உடனடியாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், தன்னைப்போல் வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்படாமல் இருக்க கருப்பு முருகானந்தம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

நாட்டை உலுக்கிய நிதாரி வழக்கு…! உண்மைகளை மூடி மறைக்க கொன்றுவிட்டார்களா…? குற்றவாளி உயிரிழந்ததில் பின்னணி என்ன…? 15 வயது சிறுமியின் தந்தை எழுப்பிய பகீர் சந்தேகம்…!

இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…

3 minutes ago

ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரே அழிஞ்சிருச்சு… மலை கிராமத்தையே விழுங்கிய மாபெரும் நிலச்சரிவு… சீனாவில் நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…

7 minutes ago

ஐயோ பாவம்… போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸை… நிறுத்தியபடியே ஓட்டுநர் திடீர் மரணம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சோகம்…!!

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…

20 minutes ago

“வாடி குடும்பம் நடத்தலாம்”…. வர மறுத்த மனைவி… குறுக்கே வந்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… திருவள்ளூரில் நள்ளிரவு பயங்கரம்…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…

53 minutes ago

நாய்கள் கடித்த சடலம்… டெல்லியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….. டெம்போவில் கதற கதற…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…

58 minutes ago

நிலவில் நடந்த பயங்கரம்…. யாருக்குமே தெரியாமல் உருவான 728 அடி பிரம்மாண்ட பள்ளம்… நாசாவுக்கே அதிர்ச்சி…. இரவோடு இரவாக மாறிய நிலவின் முகம்…!

பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…

1 மணத்தியாலம் ago