பகீர்.. பெற்ற மகனை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற தந்தை.. காதல் திருமண விவகாரத்தில் நேர்ந்த கொடூரம்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!

Spread the love

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ரூபேஷ், சென்னையில் டாட்டூ ஓவியராகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், அவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகும் ரூபேஷுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்தாலும், அவர் பெற்றோருடன் சமாதானமாகப் போகவே முயற்சி செய்து வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ரூபேஷின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அவரது பெற்றோர் வர மறுத்ததால் குடும்பத்தில் விரிசல் அதிகமானது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ரூபேஷ், நேற்று இரவு மதுபோதையில் தனது தந்தை ஏழுமலையைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது குழந்தையின் பிறந்தநாளுக்கு வராதது குறித்து இருவருக்கும் இடையே வீட்டின் வாசலில் கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை ஏழுமலை தான் கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் மகன் ரூபேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரூபேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்குக் காரணமான கத்திரிக்கோலையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமண விவகாரத்தில் தந்தை மகனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சா?”… என்ன CM சார் இப்படி பண்றீங்களே?… விஜய் அடுத்த அந்த ஒரு முடிவால் அலறும் தமிழகம்…!

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…

8 minutes ago

அமித் ஷா போட்ட அதிரடி ஸ்கெட்ச்! நள்ளிரவில் வந்த போன் கால்… பதறியடித்து டெல்லி ஓடும் ஆளுநர் அர்லேக்கர்…!

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…

17 minutes ago

விஜய்யின் ‘சிங்க’ கர்ஜனை! அலறிய திருமா, வைகோ… தவெக கூட்டணியில் வெடித்த ‘திடீர்’ பூகம்பம்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு பஞ்சாயத்து…!

தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…

26 minutes ago

2 சீட்டுனு கிண்டல் பண்ணீங்களே… இன்னைக்கு என்ன ஆச்சு… இனி நாங்கதான் சென்டர்… திமுக, அதிமுக-வை அதிரவைத்த திருமாவளவன்…!

மதுரை மாவட்டம் மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் உள்ளிட்ட 6 பேரின் நினைவு நாளையொட்டி, அங்குள்ள மணிமண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள்…

28 minutes ago

அம்மாடியோ வருஷத்துக்கு இத்தனை கோடியா?… காற்றில் பறக்கும் தங்கம்… விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்க.. இப்படி ஒரு விசித்திர மலையா…?

அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான எரிமலை, தினசரி தங்கம்…

47 minutes ago

அடுத்த விக்கெட் ரெடி… செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக்…. ஆளுநர் கையில் இருக்கும் ‘அந்த’ ரகசிய கோப்பு… தவெக அரசின் அடுத்த டார்கெட்…. பெரும் பரபரப்பு….!

திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மற்றும் முறைகேடு…

51 minutes ago