#image_title
இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அனைவருக்கும் அவசரம் தான். எந்த காரியத்திலும் பொறுமை இல்லை. அதே அவசரத்துடன் தான் சாலையிலும் செல்கிறார்கள். வேலைக்கு செல்வதானாலும் சரி, பள்ளிக்கும் சரி, அந்த கடைசி நேர பரபரப்பில் தான் ஓடுகிறார்கள். ஒரு ஐந்து நிமிடமத்திற்கு முன்பே கிளம்பி பொறுமையாக நிதானமாக செல்கிறவர்கள் மிகவும் குறைவுதான்.
இதற்கு மேலாக இன்றைய இளைஞர்கள் வேகமாக போனால்தான் கெத்து அதுதான் ட்ரெண்ட் சைக்கிள் ஓட்டுவது போல் போகக்கூடாது என்று விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு ரோட்டில் அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. இந்த நாள் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் எதிரில் நல்ல முறையில் சாலை விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. விபத்துகள் நடக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே பைக்கில் சென்றாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நல்ல முறையில் வீடு வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதான் செல்ல வேண்டியது இருக்கிறது. என்னதான் நாம் சரியாக ரோட்டில் சென்றாலும் எதிரே வருபவர்கள் சரியாக வரவில்லை என்றால் அதனால் நமக்கும் சேர்த்துதான் பாதிப்பு ஏற்படுத்துகிறது. என்னதான் அரசாங்கம் சாலை பாதுகாப்பில் பல விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு சமுதாயமும் நல்ல முறையில் இருக்க முடியும்.
இதே போல் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்காக புதுமுறையை கையாண்டு இருக்கிறது துபாய் அரசாங்கம். அது என்னவென்றால் சாலை பாதுகாப்பிற்காக ட்ரோன்களை பறக்கவிட்டு அதன் வீடியோவின் மூலம் கண்காணிப்பது தான் ஆகும். எந்த ஒரு இடத்திலும் பிரச்சனை மற்றும் விபத்து என்றால் அந்த இடத்திற்கு உடனே ட்ரோன்கள் அனுப்பப்படும். அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து உடனே அதிகாரிகள் சென்று அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ட்ரோன் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…
பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…