#image_title
இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அனைவருக்கும் அவசரம் தான். எந்த காரியத்திலும் பொறுமை இல்லை. அதே அவசரத்துடன் தான் சாலையிலும் செல்கிறார்கள். வேலைக்கு செல்வதானாலும் சரி, பள்ளிக்கும் சரி, அந்த கடைசி நேர பரபரப்பில் தான் ஓடுகிறார்கள். ஒரு ஐந்து நிமிடமத்திற்கு முன்பே கிளம்பி பொறுமையாக நிதானமாக செல்கிறவர்கள் மிகவும் குறைவுதான்.
இதற்கு மேலாக இன்றைய இளைஞர்கள் வேகமாக போனால்தான் கெத்து அதுதான் ட்ரெண்ட் சைக்கிள் ஓட்டுவது போல் போகக்கூடாது என்று விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு ரோட்டில் அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. இந்த நாள் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் எதிரில் நல்ல முறையில் சாலை விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. விபத்துகள் நடக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே பைக்கில் சென்றாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நல்ல முறையில் வீடு வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதான் செல்ல வேண்டியது இருக்கிறது. என்னதான் நாம் சரியாக ரோட்டில் சென்றாலும் எதிரே வருபவர்கள் சரியாக வரவில்லை என்றால் அதனால் நமக்கும் சேர்த்துதான் பாதிப்பு ஏற்படுத்துகிறது. என்னதான் அரசாங்கம் சாலை பாதுகாப்பில் பல விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு சமுதாயமும் நல்ல முறையில் இருக்க முடியும்.
இதே போல் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்காக புதுமுறையை கையாண்டு இருக்கிறது துபாய் அரசாங்கம். அது என்னவென்றால் சாலை பாதுகாப்பிற்காக ட்ரோன்களை பறக்கவிட்டு அதன் வீடியோவின் மூலம் கண்காணிப்பது தான் ஆகும். எந்த ஒரு இடத்திலும் பிரச்சனை மற்றும் விபத்து என்றால் அந்த இடத்திற்கு உடனே ட்ரோன்கள் அனுப்பப்படும். அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து உடனே அதிகாரிகள் சென்று அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ட்ரோன் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…