தமிழில் ரஜினி மற்றும் கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு தோனி என்ற திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து ரஜினியுடன் கபாலி திரைப்படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ரஜினியின் மனைவியாக கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதைக்களம் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி கொடுத்தது.
அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து படங்களில் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் பிசியாக நடித்து வருகின்றார். இவர் மருத்துவராக இருந்த போதிலும் சினிமாவில் இருந்த விருப்பத்தால் கடந்த 2005 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் ராதிகா ஆப்தேவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் ராதிகாவின் கணவர் இங்கிலாந்திலும் ராதிகா மும்பையிலும் வசித்து வந்தனர். அடிக்கடி தன்னுடைய காதல் கணவரை பார்க்க ராதிகா லண்டன் சென்று வந்தார். இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற பிஎஃப் பிலிம் ஃபெஸ்டிவல் இல் பங்கேற்ற ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் ஆகி சுமார் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் கர்ப்பமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…