சாலை போக்குவரத்து பாதுகாப்பை சீரமைக்கும் Gadjet… வியக்க வைக்கும் துபாய் அரசாங்கம்…

By admin on ஐப்பசி 17, 2024

Spread the love

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அனைவருக்கும் அவசரம் தான். எந்த காரியத்திலும் பொறுமை இல்லை. அதே அவசரத்துடன் தான் சாலையிலும் செல்கிறார்கள். வேலைக்கு செல்வதானாலும் சரி, பள்ளிக்கும் சரி, அந்த கடைசி நேர பரபரப்பில் தான் ஓடுகிறார்கள். ஒரு ஐந்து நிமிடமத்திற்கு முன்பே கிளம்பி பொறுமையாக நிதானமாக செல்கிறவர்கள் மிகவும் குறைவுதான்.

   

இதற்கு மேலாக இன்றைய இளைஞர்கள் வேகமாக போனால்தான் கெத்து அதுதான் ட்ரெண்ட் சைக்கிள் ஓட்டுவது போல் போகக்கூடாது என்று விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு ரோட்டில் அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. இந்த நாள் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் எதிரில் நல்ல முறையில் சாலை விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. விபத்துகள் நடக்கிறது.

   

இன்றைய காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே பைக்கில் சென்றாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நல்ல முறையில் வீடு வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதான் செல்ல வேண்டியது இருக்கிறது. என்னதான் நாம் சரியாக ரோட்டில் சென்றாலும் எதிரே வருபவர்கள் சரியா வரவில்லை என்றால் அதனால் நமக்கும் சேர்த்துதான் பாதிப்பு ஏற்படுத்துகிறது. என்னதான் அரசாங்கம் சாலை பாதுகாப்பில் பல விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு சமுதாயமும் நல்ல முறையில் இருக்க முடியும்.

 

இதே போல் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்காக புதுமுறையை கையாண்டு இருக்கிறது துபாய் அரசாங்கம். அது என்னவென்றால் சாலை பாதுகாப்பிற்காக ட்ரோன்களை பறக்கவிட்டு அதன் வீடியோவின் மூலம் கண்காணிப்பது தான் ஆகும். எந்த ஒரு இடத்திலும் பிரச்சனை மற்றும் விபத்து என்றால் அந்த இடத்திற்கு உடனே ட்ரோன்ள் அனுப்பப்படும். அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து உடனே அதிகாரிகள் சென்று அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ட்ரோன் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.