திக் திக்… ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட… ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 4 பேர் கொடூரக் கொலை… பங்களாதேஷில் பதறவைக்கும் பயங்கரம்…!

Spread the love

வங்கதேசத்தில் 2024 ஆகஸ்ட் ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்களின் வரிசையில், ரங்க்பூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி குடும்பத்தினர் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 21-ந்தேதி நள்ளிரவு வீட்டின் மாடியில் வீரியமிக்க ‘யாபா’ போதைப்பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி பிரிதிலதாவும் அந்தப் போதை நபர்களால் உடனடியாகத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்டார்.

இரண்டு கொலைகளையும் அரங்கேற்றிய அந்த இருவரும், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது மகள் அகமியையும், 12 வயது மகன் பிரியமுத்தையும் துரத்தித் துரத்தி வெட்டிக் கொன்றனர். சாட்சிகளை அழிக்கவும், அடையாளம் காண முடியாதவாறு செய்யவும் நால்வரின் முகங்களிலும் ரசாயனத்தை ஊற்றி எரித்தனர். இக்கொலைச் சம்பவத்தை ஒரு தோல்வியடைந்த கொள்ளை முயற்சி போலக் காட்ட முயன்ற கொலையாளிகள், பீரோக்களை உடைத்து நகைகளைத் திருடியதுடன் வீட்டின் பொருட்களைச் சிதறடித்தனர்.

இதன்பிறகு எந்தவித அவசரமும் இன்றி நிதானமாக வெள்ளிக்கிழமை காலை வரை வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்து அங்கு குளித்துவிட்டு, மேசையில் இருந்த பேரீச்சம்பழங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்திய ரங்க்பூர் பெருநகர காவல்துறை மற்றும் துப்பறியும் பிரிவினர், இக்கொலையில் தொடர்புடைய சித்தார்த்த தாஸ் மற்றும் முக்தா தாஸ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்; மேலும், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Swetha

Recent Posts

“ராகுலை பிரதமராக ஏற்காவிட்டால் கூட்டணியே வேண்டாம்”…. காங்கிரஸ் செல்வப்பெருந்தகை அதிரடி எச்சரிக்கை…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர்…

2 seconds ago

விஜய் சேதுபதியை மிரட்டுவதை நிறுத்துங்கள்…! “ஜனநாயகன்’ படம் நடிச்சா மட்டும் போதாது…” நடிகர் விஜய்யையும் தவெகவையும் வெளுத்து வாங்கிய சீமான்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…

32 minutes ago

“திமுக ஆதரவாளர் மனைவி இப்படி சொல்லிட்டாங்களே…” ‘எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது…’ விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு குறித்து அதிரடி பதிவு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…

46 minutes ago

“நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” காலை இழந்தும் சிரித்துக்கொண்டே சொன்ன தந்தை நிகர் மாமனார்… பிரபல இயக்குனரின் வைரல் பதிவு…!!

'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…

56 minutes ago

“கல்யாணமாகி 45 நாட்கள்தான் ஆச்சு…” புதுமணத்தம்பதிக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…

1 மணத்தியாலம் ago

“பைக் வாங்கி தந்தோம்… இப்போ ஐபோன் கேட்குற…?” பாட்டி, அத்தையை மிருகத்தனமாக அடித்த பேரன்…. கதறிய பெண்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago