“கல்யாணமாகி 45 நாட்கள்தான் ஆச்சு…” புதுமணத்தம்பதிக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

Spread the love

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று புதுமணத் தம்பதியினர் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

சிரா தாலுகாவில் உள்ள துவாராலு பாலம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பின்னாலிருந்து அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் மீது பலமாக மோதி விட்டு நிறுத்தாமல் தப்பியோடியது. இந்த கொடூர விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு கணவன் தர்ஷன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய மனைவி உஷாராணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாகப் பலியானார்.

திருமணமான சில நாட்களிலேயே புதுமணத் தம்பதி இருவரின் உயிரையும் பறித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தவாரேகெரே போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வாகனத்தையும் டிரைவரையும் பிடிக்கச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… 75 வயசுல விவாகரத்தா?… 4 மகன்கள் பிரித்து வைத்த பெற்றோர்… 51 வருஷ பந்தத்தை பஞ்சாயத்து பண்ணிய போலீஸ்… உ . பி – யில் நடந்த சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…

13 minutes ago

“தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தால் உங்கள் கண்ணை ஏன் உறுத்துகிறது…?” பிரேமலதாவின் ஆவேச கேள்விக்கு திருமாவளவன் அதிரடி விளக்கம்…!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…

17 minutes ago

ஐயோ… கீழே விழுந்துடாதீங்க… 9 வது மாடி ஜன்னல் விளிம்பில் விளையாடிய குட்டீஸ்கள்… அலறிய பக்கத்துக்கு வீட்டு பெண்… இணையத்தில் கொந்தளித்த நெட்டிசென்கள்…!

மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…

27 minutes ago

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

1 மணத்தியாலம் ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

1 மணத்தியாலம் ago