உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன் தனது வயதான பாட்டி மற்றும் அத்தையை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் அந்த வாலிபனின் ஆடம்பர ஆசைக்காகக் குடும்பத்தினர் கடன்பட்டு ஒரு புதிய பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஆனால், அதோடு நிறுத்தாமல் தற்போது தனக்குப் புதிய ‘ஐபோன்’ மற்றும் கைச்செலவுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் உடனடியாக வேண்டும் எனக் கூறி குடும்பத்தினரிடம் சண்டை போட்டுள்ளான். அவர்கள் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபன் தனது வயதான பாட்டியையும் அத்தையையும் இரக்கமின்றி மிருகத்தனமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்துள்ளான்.
பாதிக்கப்பட்ட வயதான பாட்டி கண்ணீர் மல்கத் தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்து நீதி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்டு கொந்தளித்த நெட்டிசன்கள் அந்த வாலிபன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் புலந்த்ஷஹர் போலிஸார் உடனடியாக வழக்கைப் பதிவு செய்து, அந்தப் பேரனைக் கைது செய்ய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாமக…
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…