தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெருங்களத்தூர் மற்றும் சிட்லபாக்கம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளில் வெளிப்படைத்தன்மை மீறப்பட்டதை அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அறப்போர் இயக்கம் வெளியிட்ட புகாரில், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குப் பயன்பெறும் வகையில், போலி டெண்டர்கள் http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிவடைவதற்கு முன்பே பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அதற்கு அமைச்சரும் ஆணையரும் நேரில் சென்று திறப்பு விழா நடத்தியது சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் முயற்சியே என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழாவை முன்னின்று நடத்திய துறை அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் கேள்விகள் வலுத்தன. அமைச்சரின் ஒப்புதல் இன்றி இத்தகைய முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும், ஊழலற்ற நிர்வாகம் என்ற அரசின் கூற்றுக்கு இது பின்னடைவாக அமையும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அரசின் நற்பெயரைக் காக்கும் வகையில் தவறு செய்தவர்கள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கத் தலைமை திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் சரத்தை அமைச்சரவையிலிருந்து நீக்கவோ அல்லது தீவிர விசாரணைக்கு உட்படுத்தவோ வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை பாயுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…