“18 ஆண்டு கால பந்தம்.. பாறாங்கல்லால் முடிந்த கதை!”.. கள்ளக்காதலுக்காகக் கணவரைப் புதைத்த கொடூர மனைவி… ஆந்திராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!!

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்த ஹனுமந்த ராயுடு மற்றும் சுகன்யா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ள இந்த குடும்பம், கடந்த 15 ஆண்டுகளாக கல்யாணதுர்கம் பகுதியில் உள்ள பழைய குளம் அருகே தங்கி ஆடுகளை மேய்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சுகன்யாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் ஹனுமந்த ராயுடு, மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தத் தொடர்பைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சுகன்யா, தனது கணவரைப் பாறாங்கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் யாருக்கும் தெரியாமல் உடலை வீட்டின் பின்புறத்திலேயே புதைத்து மறைத்துள்ளார். பள்ளி முடிந்து வந்த மகள் அம்ருதா இதைக் கண்டுபிடித்தபோது, யாரிடமாவது சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் எனச் சுகன்யா மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி நீண்ட நாட்களாக இந்த ரகசியத்தை மௌனமாகவே வைத்திருந்துள்ளார்.

நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, சுகன்யா தனது மகளையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதிலிருந்து நூலிழையில் தப்பிய அம்ருதா, தனது தந்தையின் சொந்த ஊரான ஹமினிரெட்டிபள்ளிக்கு ஓடிச் சென்று உறவினர்களிடம் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இதற்கிடையில், சுகன்யா கல்யாணதுர்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

4 minutes ago

“9 நாளா மார்ச்சுவரில கிடக்கும் என் புள்ள”… கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்.. மதுரையில் வீதியை அலறவிட்ட முற்றுகை போராட்டம்….!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…

10 minutes ago

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

44 minutes ago

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

55 minutes ago

ஸ்டாலின் போட்ட ஒரே போன் கால்…. சட்டென மாறிய அரசியல் களம்…. தேமுதிகவின் அதிரடி முடிவு…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…

1 மணத்தியாலம் ago

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

1 மணத்தியாலம் ago