தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது முழுமையான தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிடாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு ஆளுங்கட்சியான திமுகவும் இம்முறை இந்த வாக்குறுதியைத் தவிர்க்கக்கூடும் என்று ஒருபுறம் எதிர்பார்க்கப்பட்டாலும், அரசியல் விமர்சகர்கள் மாற்றுக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 5 சவரன் வரை அடமானம் வைத்த ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், ஒரு வியூகமாக திமுக மீண்டும் ‘நகைக்கடன் தள்ளுபடி’ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதிமுகவின் அறிக்கையில் இது இடம்பெறாதது திமுகவிற்கு ஒரு சாதகமான களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ள நிலையில், இறுதி நேரத்தில் இந்த அதிரடி அறிவிப்பை ஒரு தேர்தல் ‘மாஸ்டர் ஸ்டிரோக்’ ஆக திமுக பயன்படுத்தக்கூடும் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களின் கணிப்பாக உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…