தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது முழுமையான தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிடாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு ஆளுங்கட்சியான திமுகவும் இம்முறை இந்த வாக்குறுதியைத் தவிர்க்கக்கூடும் என்று ஒருபுறம் எதிர்பார்க்கப்பட்டாலும், அரசியல் விமர்சகர்கள் மாற்றுக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 5 சவரன் வரை அடமானம் வைத்த ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், ஒரு வியூகமாக திமுக மீண்டும் ‘நகைக்கடன் தள்ளுபடி’ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதிமுகவின் அறிக்கையில் இது இடம்பெறாதது திமுகவிற்கு ஒரு சாதகமான களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ள நிலையில், இறுதி நேரத்தில் இந்த அதிரடி அறிவிப்பை ஒரு தேர்தல் ‘மாஸ்டர் ஸ்டிரோக்’ ஆக திமுக பயன்படுத்தக்கூடும் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களின் கணிப்பாக உள்ளது.
