செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடிய சிறுவன்.. கண்டித்த பெற்றோர்.. சில நொடிகளில் காத்திருந்த பேரதிர்ச்சி..!

Spread the love

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சித்தார்த் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக சில கேம்களை செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று சித்தார்த்தை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சிறுவன் சித்தார்த் மீண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கேம் விளையாடிய நிலையில் பெற்றோர் கடுமையாக அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துள்ளார். உடனே வீட்டில் உள்ள அறையில் அவர் மயங்கி விழுந்த நிலையில் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். செல்போனை அதிகம் பார்க்க வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

5 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

6 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

18 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

23 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

25 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

28 minutes ago