திருப்பூர் மாவட்டம் அலங்கியம் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சித்தார்த் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக சில கேம்களை செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று சித்தார்த்தை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சிறுவன் சித்தார்த் மீண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கேம் விளையாடிய நிலையில் பெற்றோர் கடுமையாக அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துள்ளார். உடனே வீட்டில் உள்ள அறையில் அவர் மயங்கி விழுந்த நிலையில் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். செல்போனை அதிகம் பார்க்க வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
