தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ₹5,000 வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய நிதி உதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதமே தேர்தல் கால முன்னேற்பாடாக பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ₹3,000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ₹2,000 என மொத்தம் ₹5,000 பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது பெண்களுக்கு ஒரு பெரிய நிதி உதவியாக அமைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த புதிய ₹5,000 தொகையானது மகளிருக்கான சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான மானியம் அல்லது கடனுதவியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் மார்ச் 9-ம் தேதி (நாளை) நடைபெறும் திமுகவின் மாநில மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ₹2,000-ஆக உயர்த்தி வழங்கப்போவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…
பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…