மகளிருக்கு மீண்டும் ₹5,000..? நாளை அறிவிக்கப்போகும் முதல்வர்… தமிழக பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

By Soundarya on பங்குனி 8, 2026

Spread the love

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ₹5,000 வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய நிதி உதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதமே தேர்தல் கால முன்னேற்பாடாக பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ₹3,000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ₹2,000 என மொத்தம் ₹5,000 பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது பெண்களுக்கு ஒரு பெரிய நிதி உதவியாக அமைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த புதிய ₹5,000 தொகையானது மகளிருக்கான சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான மானியம் அல்லது கடனுதவியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் மார்ச் 9-ம் தேதி (நாளை) நடைபெறும் திமுகவின் மாநில மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ₹2,000-ஆக உயர்த்தி வழங்கப்போவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.