தூங்கி கொண்டிருந்த மாணவர்கள்…. “இரும்பு கம்பியால் தாக்கி…” சக மாணவரின் கொடூர செயல்… பகீர் சம்பவம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், தூங்கிக்கொண்டிருந்த சக மாணவர்கள் மீது சக மாணவன் ஒருவன் இரும்புக் கம்பியால் கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவை முடித்துவிட்டு மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஏழு மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய மாணவன் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்துத் தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. சுமன் பென்னேகர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். மாணவன் எதற்காக இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டான் என்பது இதுவரை தெரியவில்லை. தப்பியோடிய மாணவனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி விடுதியில் நடந்த இந்தத் துயரமான நிகழ்வு மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

6 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

6 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

6 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

6 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

6 மணத்தியாலங்கள் ago