ஆரம்பமே வெறியாட்டம்..! 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா மிரட்டல்..!!

Spread the love

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மகுடத்தைச் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், டாஸ் வென்ற இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்பதால் மைதானம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் நிரம்பி வழிகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி, ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து அதிரடி காட்டினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா வெறும் 19 பந்துகளில் அரைசதம் (51 ரன்கள்) கடந்து அசத்தினார். அவருக்குத் துணையாக நின்ற சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 33 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவர்களின் காட்டடி ஆட்டத்தால் இந்திய அணி மிரட்டலான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. பவர்பிளே ஓவர்களில் இந்திய வீரர்கள் காட்டிய இந்த அசுர வேகம், நியூசிலாந்து அணியினரை நிலைகுலையச் செய்துள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியாவின் இந்த அதிரடி ஆட்டம், ஒரு மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago